மனத்தில் பதிந்தவை

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை !
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதர்க்கு மொழியே தேவை இல்லை !

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமா !
வான நிலா ஏழை எனறால்
ஒளி கொடுக்க மறந்திடுமா !

மானம் என்ற உயிர் காக்க
மனக்கதவை மூடிக் கொண்டேன் !
அது நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்ய !

புத்தம் புது பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வானம் வேண்டும் !
தங்க மழை பொழிய வேண்டும் !
தமிழில் குயில் பாட வேண்டும் !
நெற்றி வியர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பொழிய வேண்டும் !

உனக்கும் எனக்கும் எல்லாம்
பிடிக்கும் என்றாய் ! அடி ஏன்
என்னை மட்டும் பிடிக்காதென்றாய் !

உள்ளே போன அத்தனை பேரும்
குற்றவாளி இல்லேங்க !
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லேங்க !

நடந்தா இரண்டடி
இருந்தா நாலடி
இறந்தா ஆறடி
இது அத்தனை பேருக்கும்
இறைவன் கொடுத்த வரம் !

6 comments:

  1. நல்ல பாடல்களில் நல்ல வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  1. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்

  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி வித்யா

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது

  1. கலக்கறீங்க!!

    இவ்ளோ பாட்டு கேப்பீங்களா!?

  1. வேற வேலை - வீட்டில் சும்மா தானே இருக்கேன் - நன்றி சிவா